விமானத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டவர் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பில் பரபரப்பான தகவல் ஒன்று தென்னிங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானம் ஊடாக டுபாய் செல்ல முற்பட்ட வேளையில் டனிஸ் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.
டனிஸ் அலி தொடர்பில் வெளியான தகவல்
குறித்த நபர் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு காரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து டனிஸ் அலி நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்திய அவுஸ்திரேலியா
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட ஒருவர், மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று விசா நிபந்தனைகளை மீறி ஓராண்டுக் காலம் தலைமறைவாகியிருந்த டனிஸ் அலி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகி நாட்டிலுள்ள மற்றுமொரு நபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்குவது தொடர்பான போராட்டத்தின் முன்னின்று செயற்பட்ட டனிஸ் அலி, தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சிக்குள் புகுந்து, ஒளிபரப்புகளுக்கு தடை விதித்ததுடன், நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தார்.
அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.