பாடசாலை மாணவி தொடர்பில் வெளியான காணொளி: மூவர் கைது
17 வயதுடைய பாடசாலை மாணவி தொடர்பான காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
குறித்த காணொளியை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri