கோவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
பதுளை மருத்துவமனையில் கோவிட் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த, பசறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்தன.
71 வயதான தந்தை, 72 வயதான தாய் மற்றும் அவர்களது 22 வயது மகள் ஆகியோர் கோவிட் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் மகள் சில நாட்களுக்கு முன்னர் இறந்தநிலையில், தந்தை இன்று காலை இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.