இலங்கையில் யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட 5 வெளிநாட்டவர்கள் கைது
வருகை விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் மூன்று இஸ்ரேலியர்கள் உட்பட 5 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகமவில் உள்ள ஒரு கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வைத்து நேற்றையதினம்(09.06.2025) அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியை சேர்ந்தோர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடு
குறித்த ஐவரும் யூத சட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கோழிப் பொருட்களை தயாரிக்கும் கோஷர் பாரம்பரியத்தை பின்பற்றி வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கோஷர் சிகிச்சை பெற்ற இறைச்சியை உள்ளூர் சபாத் வீடுகளின் யூத மத மையங்கள் வாங்கி அதன் பின்னர் அவற்றை அறுகம் குடாவிற்கு அனுப்ப வேண்டும்.
இலங்கையில் யூத சமையல் மரபுகள் தொடர்பான மத சடங்குகளைச் செய்வது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், வருகை விசாவுடன் வணிக நிறுவனத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மத பயிற்சியாளர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மத விவகார அமைச்சிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
