இலங்கையில் யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட 5 வெளிநாட்டவர்கள் கைது
வருகை விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் மூன்று இஸ்ரேலியர்கள் உட்பட 5 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகமவில் உள்ள ஒரு கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வைத்து நேற்றையதினம்(09.06.2025) அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியை சேர்ந்தோர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடு
குறித்த ஐவரும் யூத சட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கோழிப் பொருட்களை தயாரிக்கும் கோஷர் பாரம்பரியத்தை பின்பற்றி வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோஷர் சிகிச்சை பெற்ற இறைச்சியை உள்ளூர் சபாத் வீடுகளின் யூத மத மையங்கள் வாங்கி அதன் பின்னர் அவற்றை அறுகம் குடாவிற்கு அனுப்ப வேண்டும்.
இலங்கையில் யூத சமையல் மரபுகள் தொடர்பான மத சடங்குகளைச் செய்வது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், வருகை விசாவுடன் வணிக நிறுவனத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மத பயிற்சியாளர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மத விவகார அமைச்சிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan