இலங்கை மீனவர்களின் தாக்குதலில் இந்திய மீனவர்கள் மூவர் காயம்
இலங்கை மீனவர்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் இந்திய, தமிழகம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என பிடிஐ தெரிவித்துள்ளது.
இன்று கோடியக்கரை கடற்கரையில் இலங்கை மீனவர்கள் குழுவினரால், இந்த இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கோடியக்கரை கடற்கரையில் தென்கிழக்கில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளானதாக கடலோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்களைத் தாக்கி, அவர்களின் மீன்பிடி வலைகள்,கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பிய நிலையில் நாகப்பட்டினம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.