காலியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த மூவர் பரிதாபமாக பலி
காலியில் இன்றைய தினம் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காலி மக்குலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கூரையில் ஏறி இவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்ததில் இந்த மூன்று பேரும் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.