வவுனியாவில் மூன்று நாட்களுக்கு அமுலாகும் தடைகள்
இலங்கையில் கோவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்தில் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (14,15,16) ஆகிய மூன்று தினங்கள் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதுடன், மருந்தகங்கள் மாத்திரம் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் திறக்க அனுமதிக்கப்படுகின்றது.
மேலும் மக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தேவையின்றி வெளியில்
நடமாடுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் வவுனியா மாவட்ட
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தெரிவித்துள்ளார்.