சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள மூவர்
இலங்கை (Sri Lanka) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவிக்காக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்களே புதிய சபாநாயகராக பதவியேற்பதற்கான வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டுள்ளன.
நிரூபிக்க முடியாத நிலை
இந்தநிலையில், நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் தலைமையில் டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது, புதிய சபாநாயகர் நியமனம் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு இணங்க அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அதனை தற்போதைக்கு நிரூபிக்க முடியாத நிலையில், அவர் பதவி விலகினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
