புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது
திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதையல் தோண்டுதல்
கந்தளாய்-ரஜ எல பகுதியில் வெல்ஹேன்கொட சுசந்த சில்வா என்பவருடைய வீட்டு வளாகத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.

இதனைதொடர்ந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை நேற்று(01.10.2022) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 45,51 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை

ஏற்கனவே குறித்த இடத்தில் கல் ஒன்று இருந்ததாகவும் அந்த இடத்தில் புதையல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த இடத்தை தோண்டியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் கந்தளாய் நீதவான்
முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam