அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த மூவர் கைது!
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த 3 பேர் பண்டாரகமவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, 98 கடவுச்சீட்டுகள் மற்றும் 210,000 ரூபா பணம் என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 20 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி சிலாவத்துர, கொன்டச்சிகுடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4 முச்சக்கர வண்டிகள் கடற்படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முச்சக்கர வண்டியில் இருந்த 20 பேரும் சட்டவிரோதமாக கடல் வழி ஊடாக வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்ல தயாராக இருந்தார்கள் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்கள் 4 பெண்களும் 2 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 21 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri