முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் திருடில் ஈடுபட்ட மூவர் கைது
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரமந்தனாறினை சேர்ந்த 38, 27 மற்றும் 25 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
முல்லைத்தீவு - விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி கடந்த 18 ஆம் திகதி அன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த நிலையில் வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினையடுத்து சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம் (19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம் (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
