ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ள தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Tamil nadu Government Of India India Bengaluru
By Sivaa Mayuri Feb 20, 2024 08:22 AM GMT
Report

கர்நாடக அரசின் வசம் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் தமிழ்நாடு மாநில உள்துறை செயலாளர் நேரில் முன்னிலையாகி இந்த நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

ஹரீன் பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் - கம்மன்பில போர்க்கொடி

ஹரீன் பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் - கம்மன்பில போர்க்கொடி

வழக்கு விசாரணை

அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ள தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு | Bangalore Special Court Jayalalithaa Jewellery

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள திறைசேரியில் வைக்கப்பட்டன.

இதற்கிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.

வாழ வழியில்லை: சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றில் வெளியிட்ட தகவல்

வாழ வழியில்லை: சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றில் வெளியிட்ட தகவல்

 நீதிமன்றத்தின் தீர்ப்பு

அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ள தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு | Bangalore Special Court Jayalalithaa Jewellery

இதனையடுத்து சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று விடுதலையாகினர்.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார்.எனினும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மின் கட்டணம் குறைப்பு: இறுதி தீர்மானம் தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு

மின் கட்டணம் குறைப்பு: இறுதி தீர்மானம் தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு

5 கோடி ரூபா வழங்க உத்தரவு

இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழ்நாட்டுக்கு மாற்றுவது நல்லது என்று முடிவெடுக்கப்பட்டது எனவே தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி, காவல்துறையினருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடப்பட்டது.

ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ள தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு | Bangalore Special Court Jayalalithaa Jewellery

அதன்படி பெங்களூரில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது.

அவை, தமிழ்நாடு அரசின் திறைசேரியில் வைக்கப்படும். இதேவேளை நகைகளை கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெறுவதற்கும், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நடத்தியமைக்கும், கர்நாடக அரசு செய்த செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு 5 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கவேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னாரில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மன்னாரில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மான்செஸ்டர் சிட்டி கழக தொடரில் கிளிநொச்சி மாணவன்

மான்செஸ்டர் சிட்டி கழக தொடரில் கிளிநொச்சி மாணவன்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US