மன்னாரில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தலைமன்னாரில் படுகொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி கியானுசியாவின் படுகொலைக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க கோரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கொலையாளி தகுந்த தண்டனை வழங்க கோரியும் பல கோஷங்களை தாங்கி வாறு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |