ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி ஐஸ் கடத்திய மூவர் கைது- மோட்டார் சைக்கிளும் மீட்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய மூவர் ஏறாவூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று(09) மாலை இடம்பெற்ற இக்கைதில் கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது 16000 மில்லி கிராம் கேரளா கஞ்சா, 400 மில்லி கிராம் ஐஸ் ஆகியவற்றுடன் மூவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர்களும் போதைப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.



ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri