எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் உண்டு: சபாநாயகரிடம் முறையிட்ட ரொஷான்
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது. இதனைச் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(16) உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலையும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகின்ற ஹமாசின் நிலக்கீழ் தளங்களும் (Video)
குற்றச்சாட்டு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எனது 13 வருட அரசியல் வாழக்கையில் யாரிடம் எந்தக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை. அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை. மானிய எரிபொருள் வாங்கியதில்லை.

மேலும் அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா கூறியதைச் சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தன்னை அச்சுறுத்தும் விதத்தில் சம்மி சில்வா கருத்துக்களை முன்வைத்தார்” என குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18