இலங்கையில் டெல்டா மாறுபாட்டின் பயங்கரமான தன்மையை விளக்கும் மரணங்கள்!
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் கோவிட் மூன்றாவது அலை தொடங்கியதிலிருந்து, கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் பதிவான கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 110 ஆகும். மே மாதத்தில் 806 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஜூனில் 1,593 இறப்புகளும் ஜூலை மாதம் 1364 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 29 நாட்களில் மட்டும் 4,550 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கோவிட் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத உயிரிழப்புகளை விட ஆகஸ்ட் மாதம் மட்டும் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது டெல்டா வகையின் பயங்கரமான தன்மையை விளக்குகிறது என கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், மாவனெல்ல வைத்தியசாலையில் இருந்து தப்பிய, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 67 வயது முதியவர் அரவ்போல பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
எனினும், அவரது உடலின் இறுதி சடங்குகளை வழக்கம் போல் நடத்துமாறு அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி அறிவுறுத்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவருக்கு கோவிட் தொற்று இருப்பதாக சுகாதார அறிக்கை தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரது இறப்பு சான்றிதழில் இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
