சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 77 பேர் கைது
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு - களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்டவிரோதமாக பயணித்த 77 பேரையே இன்று(11) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றிவளைப்பு
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய இன்று அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடற்பகுதியில் பயணிக்கும் போதே சுற்றிவழைத்து இயந்திர படகை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 பேரும் சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்தவர்களாவர்.
பணம் பறிமுதல்
கடற்படையினர் கைப்பற்றிய 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி கைது |



