போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி கைது
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை ஒரு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த போது கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இந்த அதிகாரி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வருகின்றனர்.
உத்தியோகபூர்வ உடைகள் மற்றும் காலணிகளை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு தங்கியிருந்தமையினால் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், எனினும், பொலிஸ் தலைமையகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.