நீதிமன்றில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பொலிஸார்: கஜேந்திரன் விசனம் (Video)
விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (20.09.2023) தியாக தீபம் திலீபனின் பேரணியை தடைசெய்வது தொடர்பில் யாழ்.நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவாதத்தின் பின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடுக்கும் வகையில் பொய்யான பிழையான தகவல்களை நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கியிருந்தனர்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு நினைவேந்தல்கள் உரிய முறையில் நடைபெறுவதற்கான கட்டளை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இந்த அரசாங்கமானது பொலிஸ் திணைக்களத்தை பயன்படுத்தி ஜனநாயக குரல்களை நசுக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
