யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (Photos)
தியாக தீபம் திலீபனின் 6 ஆம் நாள் நினைவேந்தல் இன்றையதினம் (20.09.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு இடம்பெற்று வருகின்றது.
அடையாள உண்ணாவிரதம்
இந்த நிலையில் இன்று காலை மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |