கோவிட் - 19 அச்சுறுத்தல்! - குருநாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது
கோவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் பகுதியொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் - 19 வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இன்று இதுவரையில் 578 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 98,050 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும். இதேவேளை, கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
