கோவிட் - 19 அச்சுறுத்தல்! - குருநாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது
கோவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் பகுதியொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் - 19 வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இன்று இதுவரையில் 578 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 98,050 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும். இதேவேளை, கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.