யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (25.03.2024) தினம் இடம்பெற்றுள்ளது.
திருத்தைலம் திருச்சடங்கு
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றுள்ளன.
இத்திருப்பலியில் குருக்கள் துறவிகள் அருட்சகோதர்கள் குருமட மாணவர்கள் இறைமக்களெனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.