யாழ்.நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலையில் இருந்து யாழ்.நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்து வரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (12) காலை வழக்கொன்றுக்காக அழைத்து வரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழப்புக்கான காரணம்
குறித்த கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புபட்டவர் என பொலிஸார் மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
