திருக்கேதீஸ்வர ஆலய மஹா கும்பாபிஷேகத் திருவிழா: புதிய சிலைகளும் திறந்து வைப்பு(Photo)
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(3) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சிலைகள் திறந்து வைப்பு


இதேவேளை, திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
திருவிழா

தொடர்ந்தும் நாளை(04) மற்றும் நாளை மறுதினம்(05) இந்நிகழ்வு நடைபெறுவதுடன், 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கிரியைகள் இடம்பெற்று 6 ஆம் திகதி புதன்கிழமை காலை சுபமுகூர்த்த
வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 20 மணி நேரம் முன்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam