IMF உடனான மூன்றாவது மீளாய்வு கூட்டம் சுமூகமாக நிறைவு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் இன்று 22) நிறைவடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் கலந்துகொண்டது.
பொருளாதார அபிவிருத்தி
இந்த கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமை தாங்கியுள்ளார்.
இக்கூட்டத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
