நாட்டை பற்றி சிந்தித்து ஆர்ப்பாட்டங்களை நிறுத்துங்கள்-குமார வெல்கம
நாட்டை பற்றி சிந்தித்து ஆர்ப்பாட்டங்களை ஒரு வருடத்திற்கேனும் நிறுத்துமாறு நாட்டின் சகல பிரஜைகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள்

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது. சுற்றுலாப பயிணகள் வந்தால் மட்டுமே நாட்டுக்கு டொலர் கிடைக்கும். இல்லாவிட்டால் டொலர் கிடைக்காது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் போது சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள்.

மேலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் இலங்கைக்கு சட்ட ரீதியான வழிகளில் பணத்தை அனுப்பாது உண்டியல் முறையில் மூலம் நாட்டுக்கு பணத்தை அனுப்புகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு நாட்டுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அத்துடன் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு அவையில் உள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நானும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களை அரச சேவைகளில் சேர்த்தேன் எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri