நல்லூரில் தியாகி திலீபனை நினைவேந்தி உண்ணாவிரதம் (Video)
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
நாளை இறுதி நாள் நிகழ்வு
தியாக தீபத்தின் நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தரணியெங்கும் நடைபெற்று வரும் நிலையில், நாளை திங்கட்கிழமை இறுதி நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, நாளை திங்கட்கிழமை பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் நல்லூருக்குப் பவனி வர இருக்கின்றன.
அனைத்து ஊர்திகளும் காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தியாக தீபம் திலீபன் உயிர் பிரிந்த காலை 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவுள்ளது.
நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு
"இதன்போது மக்கள் பெரும் எழுச்சியாக வரவேண்டும். வாகன ஊர்திகள், தூக்குக் காவடிகளை எங்கள் உறவுகள் காலையில் இருந்து அவற்றை கொண்டு வரலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தியாக தீபம் திலீபன் பிறந்த ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருக்கின்றது. இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும்" என்று நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்தமாக அடையாள உண்ணாவிரதம் நடைபெறுவதுடன், சித்திரப்போட்டி, மற்றும் இரத்ததானம் என்பனவும் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்று வருகின்றது.
மேலதிக செய்தி:தீபன்











சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
