மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் (Photos)
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களில் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் - குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை மூவர் அடங்கிய திருட்டுக்கும்பல் புகுந்துள்ளது.
அதனை அவதானித்த அயலவர்கள் , குறித்த வீட்டினை வெளியில் சுற்றி வளைத்து மூன்று திருடர்களையும் , மடக்கிப் பிடிக்க எத்தனித்த போது , ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
மடக்கி பிடிக்கப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டதனை அடுத்து பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம்
கொண்டு சென்றனர்.

