வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதில் பயனில்லை - மஹிந்த அமரவீர
அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதில் பயனில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமையினாலேயே அரிசி விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நன்மைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற போதிலும் வர்த்தமானி அறிவித்தலினால் இடைத்தரகர்களே லாபமீட்டினர் என தெரிவித்துள்ளார்.
ஆறு மாத கடின உழைப்பினால் செய்யப்படும் அறுவடைகளுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் விலை நிர்ணயிப்பது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி மாபீயாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஐந்து அரிசி ஆலைகளை ஆரம்பிக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இந்த அரிசி ஆலை நிறுவப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 18 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
