கொழும்பில் சூட்கேஸிற்குள் பெண்ணின் சடலம் - 1500 இளம் பெண்களுக்கு நடந்தது என்ன?
இலங்கையில் கடந்த சில மாதங்களாக 1500 பெண்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணப்பை ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கிடைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
காணாமல் போன அல்லது தகவல் கிடைக்காத நிலையில் உள்ள பெண்களுக்கு திருமணமானவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிலர் இரகசியமாக வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த பெண்கள் தொடர்பில விாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




