நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு
பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது.
உலகளாவிய தட்டுப்பாடு
பல மாதங்களாக இந்த நோய் தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு நிலவுகின்றது.
எவ்வாறாயினும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |