ஐக்கிய மக்கள் சக்தியில் எவ்வித பிளவுகளும் கிடையாது – சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியில் எவ்வித பிளவுகளும் கியைடாது என கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு மத்தியில் எவ்வித முரண்பாட்டு நிலைமைகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு என அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இவ்வாறான எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.