தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gun Shooting
By Dhayani Mar 12, 2024 12:14 PM GMT
Report

புதிய இணைப்பு

தென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காலி, எல்பிட்டி - பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றைய நபர் வைத்தியசாலையிலும் சாவடைந்துள்ளனர்.

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! இருவர் காயம்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! இருவர் காயம்

2 ஆண்கள் பலி

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தப் படுகொலைக்கு டி - 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை | Thera Massacre Suspect Shot Dead

இதேவேளை, காலி, அம்பலாங்கொடை - கலகொட பிரதேசத்தில் கடையொன்று மீது நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கும் T - 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர விசாரணை

இதேவேளை, கம்பஹா, பியகம பிரதேசத்தில் நேற்றிரவு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மேற்படி நபர், வீட்டுக்கு அருகில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை | Thera Massacre Suspect Shot Dead

முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது இவ்வாறிருக்க, கம்பஹா, ஜா - எல பிரதேசத்தில் நேற்றிரவு 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், வீட்டில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தென்னிலங்கையை உலுக்கிய இந்தப் படுகொலைச் சம்பவங்கள் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் சுமார் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தி - ராகேஸ்

முதலாம் இணைப்பு

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11) பிற்பகல் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

தென்னிலங்கையில் பெளத்த பிக்கு சுட்டுக் கொலை - சந்தேகநபர் கைது

தென்னிலங்கையில் பெளத்த பிக்கு சுட்டுக் கொலை - சந்தேகநபர் கைது

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை | Thera Massacre Suspect Shot Dead

வெளியான காரணம்

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.  

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை | Thera Massacre Suspect Shot Dead

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபர்  நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்துள்ளார்.

காலியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

காலியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US