தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுள்ளது.
குறித்த பெருவிழாவானது இன்று (25) இடம்பெற்றதுடன் கடந்த 20ஆம் திகதி கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
உற்சவம்
இந்நிலையில் இன்று நான்கு கோபுரத்திந்கான கலச கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் சகல நான்கு பக்க கோபுர கலச மஹாகும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மஹா கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து எதிர்வரும் 48 நாள் மண்டலாபிஷேக உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |