இராஜாங்க அமைச்சர் மீது திருட்டு குற்றச்சாட்டு
ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
குற்ற விசாரணைப்பிரிவில், இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலையில் பாரியளவில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்தின் அனுமதியுடன் இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் அரசாங்கம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |