ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு!
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் வெளியீட்டு விழா நேற்றைய தினம்(29) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் மாலை 03.00 மணிக்கு தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையினரின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தினுடைய பீடாதிபதி ரகுராம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
சயனைட் நாவல்
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக ஐபிசி மற்றும் றீச்சா குழுமத்தினுடைய நிர்வாகியான கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டிருந்தார்.
முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் அதிகாரி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் அஜந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தினுடைய தலைவர் பரமநாதப்பிள்ளை, மூத்த நாடக கலைஞர் ஏழுமலைப்பிள்ளை போன்றவர்களும் முன்னாள் போராளிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் குறித்த சயனைட் நாவலானது கடந்த வருடம்(2024) மார்கழி மாதம் இந்தியா சென்னையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


