14 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்ற இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியைப் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து தனியே அழைத்துச் சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (18.03.2023) தெல்லிப்பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ்
அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலைக்குச் செல்ல முற்பட்டபோது குறித்த இளைஞன், சிறுமியை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்குப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயபாலா தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினர், சிறுமியை மீட்டுள்ளதுடன் இளைஞனைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
