கொழும்பில் இடம்பெற்ற விருந்து வைபவத்தில் மோதல்: இளைஞன் உயிரிழப்பு!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்ற விருந்து வைபவம் ஒன்றின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (18.03.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை
சம்பவ தினமான நேற்று, கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் சிலர் விருந்து வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாகத் பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
