எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பல் இன்னமும் ஆபத்தானதாகவே காணப்படுகின்றது
எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பல் இன்னமும் ஆபத்தான் நிலையிலேயே காணப்படுகின்றது.
அதன் முன்பகுதி நீரின் மேற்பரப்பில் உள்ளது என கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் முழுமையாக ஸ்திரமான நிலைக்கு வரும்வரை எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என கப்பலின் உரிமையாளர்களான எக்ஸ் - பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கப்பல் தொடர்பான நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். ஆனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் அன்று லீகே தெரிவித்துள்ளார்.
கப்பல் இன்னமும் பாதுகாப்பற்றதாக காணப்படுவதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்ல என தெரிவித்துள்ள அவர் கப்பல் உரிமையாளர்களால் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பது மாத்திரம் தற்போது சாத்தியமாகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலில் இருந்து சாம்பல் நிற வெளிச்சம் போன்ற ஒன்று வெளியாகின்றது கடல்நீரின் நிறம் மாற்றமடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.