இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள்
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இலங்கை வங்கியின் தலைமையகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் இந்த இரத்தின கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுவத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அமைந்துள்ள கட்டடம் தாழிறங்கும் ஆபத்தில் உள்ளமையினால் அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டியிலுள்ள உள்ள இடத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையை நடத்தி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை உரிய முறையில் ஏற்பாடு செய்யும் வரையில் அதிகார சபையின் பொறுப்பில் இருந்த உலகின் மிக மதிப்பு மிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இலங்கை வங்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் உத்தரவுக்கு அமைய விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பிற்கு மத்தியில் இலங்கை வங்கியின் பிரதான கட்டடத்திற்கு இந்த இரத்தின கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.




இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri