தடுப்பூசியை கொள்வனவு செய்ய 80 பில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி
இலங்கை கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி 80.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
உலக வங்கிக்கும் இலங்கை அரசிக்கும் இடையில் இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கோவிட் அவசர பதிலளிப்பது மற்றும் சுகாதார கட்டமைப்பை தயார்ப்படுத்தும் திட்டத்திற்காக வழங்கப்படும் இரண்டாவது நிதி ரீதியான ஒத்துழைப்பு இது என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளது.
இந்த நிதி தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் அவற்றை மக்களுக்கு வழங்கவும் முக்கியமானது என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.