நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 58 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (5,876,282) கோவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 16 லட்சம் பேருக்கு (1,697,689), இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 14.8 சதவீதம் பேர் கடந்த திங்கள்கிழமைவரை இரண்டு அளவுகளுடன் முழுமையாக தடுப்பூசி அளவுகளை பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 51.1 சதவீதம் பேர் இதுவரை முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்வர்களின் எண்ணிக்கை 75லட்சத்துக்கும் அதிகமானதாகும் (7,573,967) கம்பஹா , கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தமது முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 77 சதவீத மக்கள் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri