நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 58 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (5,876,282) கோவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 16 லட்சம் பேருக்கு (1,697,689), இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 14.8 சதவீதம் பேர் கடந்த திங்கள்கிழமைவரை இரண்டு அளவுகளுடன் முழுமையாக தடுப்பூசி அளவுகளை பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 51.1 சதவீதம் பேர் இதுவரை முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்வர்களின் எண்ணிக்கை 75லட்சத்துக்கும் அதிகமானதாகும் (7,573,967) கம்பஹா , கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தமது முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 77 சதவீத மக்கள் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam