முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பட்டதாரிகளை பாராட்டிய சோபித தேரர்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்கலையின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை பட்டதாரிகள் பொது மேடையில் வைத்து புறக்கணித்தமை தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும், சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் பட்டதாரிகளை பாராட்டியுள்ளார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற சிலர் மறுத்துள்ள நிலையில், மாணவர்கள் சிலர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில்,ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தனிப்பட்ட, அரசியல், உறவினரின் நட்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே,அரசியல் ரீதியில் நியமனம் வழங்கப்படும் மகாநாயக்கர் நாயகம், பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இதனைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்.....
மேடையில் வைத்து முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பட்டதாரிகள்! வெளியானது காணொளி
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 7 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
