ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும்
ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
