நெடுங்கேணியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை: வெளியான காரணம்
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்த நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலில் விசம் பரவியமையே மரணத்திற்கான காரணம் எனவும், இரவு நேரங்களில் விச ஊர்வன ஏதாவது கடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
