விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணமானது சீரற்ற காலநிலைக்கும், சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் இரு குழுக்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது.
தொடர்ச்சியாக 17.05.2021 இன்று மூன்றாவது நாளாக லங்கெந்தால், சொலத்தூர்ண் நகரங்களுக்கு ஊடாகப் பயணிக்கின்றனர்.
சூரிச் மாநிலத்தில் ஆரம்பித்த பயணமானது சுக் மாநிலத்தில் இன உணர்வாளர்களின் உற்சாக வரவேற்புடனும், விருந்தோம்பலுடன் நிறைவடைந்ததுடன், தொடர்ந்து கடும் மழையினையும் பொருட்படுத்தாது விடுதலை வேட்கையுடன் சுக் மாநிலத்திலிருந்து லுட்சேர்ன் மாநிலத்தை மாலையளவில் சென்றடைந்த போது மனிதநேயச் செயற்பாட்டாளர்களை லுட்சேர்ன் வாழ் மாநில இன உணர்வாளர்கள் வரவேற்பளித்து அவர்களது நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சூரிச் மாநிலத்தில் மாநகரசபை உத்தியோகஸ்தர்களிடம் தமிழின அழிப்புப் பற்றியதான மகஜர் கையளிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 16 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam