விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணமானது சீரற்ற காலநிலைக்கும், சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் இரு குழுக்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது.
தொடர்ச்சியாக 17.05.2021 இன்று மூன்றாவது நாளாக லங்கெந்தால், சொலத்தூர்ண் நகரங்களுக்கு ஊடாகப் பயணிக்கின்றனர்.
சூரிச் மாநிலத்தில் ஆரம்பித்த பயணமானது சுக் மாநிலத்தில் இன உணர்வாளர்களின் உற்சாக வரவேற்புடனும், விருந்தோம்பலுடன் நிறைவடைந்ததுடன், தொடர்ந்து கடும் மழையினையும் பொருட்படுத்தாது விடுதலை வேட்கையுடன் சுக் மாநிலத்திலிருந்து லுட்சேர்ன் மாநிலத்தை மாலையளவில் சென்றடைந்த போது மனிதநேயச் செயற்பாட்டாளர்களை லுட்சேர்ன் வாழ் மாநில இன உணர்வாளர்கள் வரவேற்பளித்து அவர்களது நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சூரிச் மாநிலத்தில் மாநகரசபை உத்தியோகஸ்தர்களிடம் தமிழின அழிப்புப் பற்றியதான மகஜர் கையளிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.











ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
