உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு
உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நீதிமன்றங்களினதும் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.