அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க தயாராகும் ஆளும் கூட்டணி கட்சிகள்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் அரசாங்கத்திற்கு சில ஆலோசனைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளன.
நாடு எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட உள்ளன.
நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் நோக்கில் இந்த ஆலோசனைக்கள் முன்வைக்கப்பட உள்ளன.
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளதுடன், அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைப்பது என தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் தங்களது பரிந்துரைகளை அதிகாரபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க கூட்டணி கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடி நிலைமைகள் பற்றிய உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்காது யதார்த்தத்தை மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டுமென கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், வீரசுமன வீரசிங்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.