இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நகர்த்தும் நோக்கத்தில் அரச சேவையையும் டிஜிட்டல்மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத்திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆகியோரின் தலைமையில் நேற்று (03) சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
அரச சேவையின் செயல்திறனை அதிகரித்தல்
உலகளாவிய தொழில்நுட்பப்போக்குகளுடன் அரச சேவையின் செயல்திறனை அதிகரித்தல், சேவை தாமதங்களைக் குறைத்தல் மற்றும் அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த திட்டம், டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக சிரேஷ்ட அதிகாரிகளிடையே தொழில்நுட்ப அச்சத்தை குறைப்பதன் மூலம் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க மின்னணு கற்றல் முறையைப் பயன்படுத்தவும், கைபேசிகள் மூலம் கிடைக்கும் குறுகிய காணொளிப்பாடங்கள் வழியாக நுண் கற்றல் முறையை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் பதவி உயர்வுகளுக்கு, இந்த டிஜிட்டல் எழுத்தறிவுப்பயிற்சியை நிறைவு செய்வதை கட்டாயமாக்குவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
அதிகாரிகளுக்கு பயிற்சி
பயிற்சிக்காக அலுவலகம் மற்றும் பாடசாலை கணினி ஆய்வகங்களைப் பயன்படுத்தவும், விளையாட்டுமயமாக்கல் முறைகளை அறிமுகப்படுத்தவும், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், புதிய பணியாளர்களுக்கு டிஜிட்டல் தகுதிகளைக் கட்டாயமாக்குதல், மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை உருவாக்குதல் ஆகிய மும்முனைத் திட்டத்தின் கீழ் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டமாக, அரச அதிகாரிகளுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு குறுகிய விழிப்புணர்வுப் பயிற்சியும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்புக்கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.
அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை - CCTV குறித்து வெளியான தகவல்
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan